sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பேரிடர் அபாய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி மூன்று இடத்தில் மொபைல் வாகனம்

/

பேரிடர் அபாய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி மூன்று இடத்தில் மொபைல் வாகனம்

பேரிடர் அபாய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி மூன்று இடத்தில் மொபைல் வாகனம்

பேரிடர் அபாய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி மூன்று இடத்தில் மொபைல் வாகனம்


ADDED : மே 19, 2024 11:22 PM

Google News

ADDED : மே 19, 2024 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;நீலகிரிமாவட்டத்தின் பல பகுதிகளில், தீயணைப்பு துறையினர், 24 மணி நேரம் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.'சில நாட்கள், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும்,' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம், 456 நிவாரண முகாம்களை தயார்படுத்தியுள்ளது. அனைத்து துறை ஒருங்கிணைப்புடன் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஊட்டி உட்பட மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக மிதமான மழை, சில இடங்களில் கன மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக, கிளன்மார்கன், 32 மி.மீ; நடுவட்டம், 26, மி.மீ;ஊட்டி, 21 மி.மீ ., மழையளவு பதிவாகி உள்ளது.

தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் புலுகாண்டி கூறுகையில், ''ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் பகுதிகளில் அந்தந்த தீயணைப்பு துறை மூலம் பேரிடர் தடுப்பு நடவடிக்கையில் தேவையான உபகரணங்களுடன் ஊழியர்கள், 24 மணி நேரம் கண்காணிப்பில் தயார் நிலையில் உள்ளனர். தவிர, பர்லியார், நாடுகாணி, குஞ்சப்பனையில் தீயணைப்பு துறை மொபைல் வாகனம் தயார் நிலையில் உள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us