sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'விஸ்வகர்மா யோஜனா' திட்டம் குஜராத் எம்.பி., துவக்கி வைப்பு

/

'விஸ்வகர்மா யோஜனா' திட்டம் குஜராத் எம்.பி., துவக்கி வைப்பு

'விஸ்வகர்மா யோஜனா' திட்டம் குஜராத் எம்.பி., துவக்கி வைப்பு

'விஸ்வகர்மா யோஜனா' திட்டம் குஜராத் எம்.பி., துவக்கி வைப்பு


ADDED : ஜன 02, 2024 11:51 AM

Google News

ADDED : ஜன 02, 2024 11:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: மத்திய அரசின், 'விஸ்வகர்மா யோஜனா' திட்டம், சிறு, குறு தொழில்களை ஊக்குவிக்கவும், குலத்தொழிலை வளர்க்கவும் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டம் கிராம பகுதிகளிலும் பரவ வேண்டும் என்ற நோக்கத்தில், பா.ஜ.,வினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.

அதன்படி, குமாரபாளையம் அருகே, குப்பாண்டபாளையம் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர்., நகரில், 'விஸ்வகர்மா யோஜனா' திட்ட துவக்க விழா, நேற்று நடந்தது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த, எம்.பி., ரபிலா பின் போரா, திட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:

குஜராத் மாநிலத்தின் கடைக்கோடி பகுதியான, சாந்தி நகர் பகுதியில் இருந்து நான் வந்துள்ளேன். 'விஸ்வகர்மா யோஜனா' திட்டம் ஒரு சிறந்த திட்டம். இது சாதாரண மக்களின் வாழ்வாதாரம் உயர வழிவகை செய்யும். இந்த திட்டத்தில், தமிழகத்தில், 86 லட்சம் மனுக்கள் இதுவரை பெறப்பட்டுள்ளது. இதில், 32 லட்சம் மனுக்களுக்கு மாவட்ட நிர்வாக மூலம் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், மேலிட பார்வையாளர் சிவகாமி பரமசிவம், மாவட்ட பொது செயலாளர் சரவணராஜன், மாவட்ட விளையாட்டு திறம் மேம்பாட்டு பிரிவு தலைவர் நாகராஜன், மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் தங்கவேல், மாவட்ட துணை தலைவர் கனகராஜ், நகர தலைவர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us