/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மா மரத்தில் மருந்து தெளிப்பு
/
பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மா மரத்தில் மருந்து தெளிப்பு
பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மா மரத்தில் மருந்து தெளிப்பு
பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மா மரத்தில் மருந்து தெளிப்பு
ADDED : டிச 31, 2025 05:49 AM

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகு-திகளான, ராமநாதபுரம் புதுார், வெண்டாங்கி, கார-வள்ளி, காளப்பநாயக்கன்பட்டி பகுதிகளில், 2,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மா சாகுபடி செய்து வருகின்றனர். இந்தாண்டு பருவமழை அதிகமாக பெய்ததால், மா மரத்தில் அதிகளவில் பூ பூக்கும் என, விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில், மா பூவில் பூச்சி தாக்குதல் இல்-லாமல் இருப்பது முக்கியம். அதனடிப்படையில் மா பூவில் பூச்சிகள் வராமல் இருக்க விவசா-யிகள் மா மரத்தில் மருந்து அடித்து பாதுகாப்பது வழக்கம். இப்பகுதியில் விளையும் மாங்காய்-களை, தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்க-ளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
இதனால், மா மரங்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்-டுள்ளனர். இந்த மருந்து தெளிப்பதால், பூக்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தி, விளைச்சல் அதிகரிக்கும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.

