/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முருகன் கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு
/
முருகன் கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு
ADDED : ஏப் 15, 2024 03:43 AM
நாமக்கல்: சஷ்டியையொட்டி, நாமக்கல் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
சித்திரை வளர்பிறை சஷ்டி மற்றும் தமிழ் புத்தாண்டையொட்டி, நாமக்கல்லில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அதில், நாமக்கல் - மோகனுார் சாலை, காந்தி நகர், பாலதண்டாயுதபாணி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு மலர் அங்கியால் அலங்காரம் செய்யப்பட்டு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* நாமக்கல் கடைவீதி சக்தி கணபதி கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதே சன்னதியில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சஷ்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
* சித்திரை சஷ்டியையொட்டி, மோகனுார், காந்தமலை, பாலதண்டாயுதபாணி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தங்கக்கவசம் சாற்றப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
* நாமக்கல் அருகே, கூலிப்பட்டியில் உள்ள கந்தமலை பழனியாண்டவர் கோவிலில், பழனியாண்டவருக்கு படி பூஜை செய்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதேபோல், சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவிலில், 24 வகையான வாசனை திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

