/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு பள்ளி அருகே கும்மிருட்டு மின்விளக்கு அமைக்க கோரிக்கை
/
அரசு பள்ளி அருகே கும்மிருட்டு மின்விளக்கு அமைக்க கோரிக்கை
அரசு பள்ளி அருகே கும்மிருட்டு மின்விளக்கு அமைக்க கோரிக்கை
அரசு பள்ளி அருகே கும்மிருட்டு மின்விளக்கு அமைக்க கோரிக்கை
ADDED : செப் 14, 2025 04:46 AM
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் யூனியன், வையப்பமலை அரசு மேல்நிலைப்-பள்ளி அருகே பத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உள்ளன. ஆனால், இந்த கம்பங்களில் இதுவரை மின் விளக்கு அமைக்க-வில்லை. இதனால், இரவில் போதிய வெளிச்சமின்றி கும்மிருட்-டாக காணப்படுகிறது. மாலை நேர வகுப்பு முடித்து செல்லும் மாணவர்கள், இரவு நேரங்களில் வேலையை முடிந்து செல்லும் பெண்கள் போதிய வெளிச்சமின்றி சிரமத்துக்குள்ளா-கின்றனர்.
விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் மாணவர்கள், பொதுமக்கள் அச்சப்பட்டு செல்ல வேண்டிய சூழல் உள்ளது.அதுமட்டுமின்றி, அமாவாசை தினத்தில் கும்மிருட்டு உள்ளதால் திருடர்களாலும் பொதுமக்களுக்கு மிகுந்த அச்சுறுத்தல் நிலவி வருகிறது. எனவே, மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.