/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோவிலுக்கு பாதை வசதி கேட்டு கருக்கம்பாளையம் மக்கள் மனு
/
கோவிலுக்கு பாதை வசதி கேட்டு கருக்கம்பாளையம் மக்கள் மனு
கோவிலுக்கு பாதை வசதி கேட்டு கருக்கம்பாளையம் மக்கள் மனு
கோவிலுக்கு பாதை வசதி கேட்டு கருக்கம்பாளையம் மக்கள் மனு
ADDED : செப் 24, 2024 01:27 AM
நாமக்கல்: கோவிலுக்கு பாதை வசதி கேட்டு, கருக்கம்பாளையம் பகுதி மக்கள், நாமக்கல் கலெக்டர் உமாவிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:ப.வேலுார் தாலுகா, கோலாரம் அடுத்த கருக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டி, வெளிப்புறம் தென்கி-ழக்கு பகுதியில், 300 ஆண்டு பழமையான பாரம்பரியமிக்க மாலாகோவில் உள்ளது. இக்கோவில், நடுகல் கோவில் ஆகும்.இங்கு, தை மாதம், 2-ம் நாள் விழாவில், 5 மாவட்டங்களை சேர்ந்த, 500 குடும்பத்தினர் கொண்டாடி வருகின்றனர். கடந்-தாண்டு இக்கோவிலுக்கு செல்லும் பாதையை அருகே உள்ள-வர்கள் அடைத்ததால், விழாவை நடத்த
முடியவில்லை.தற்போது, பாதையில் தடுப்பு மண் கொட்டியும், முற்களை வெட்-டிபோட்டும் மறித்துள்ளனர். ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த கோவில் பாதையை திடீரென மறித்ததால், வழிபாடு நடத்த முடியவில்லை. எனவே,
கோவிலுக்கு வழிப்பாதை ஏற்படுத்தி எங்களுக்கு வழிப்பாதையை ஏற்படுத்தி தர வழிவகை செய்து தர-வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

