sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தீவிரம்

/

ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தீவிரம்

ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தீவிரம்

ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தீவிரம்


ADDED : ஏப் 12, 2024 07:07 AM

Google News

ADDED : ஏப் 12, 2024 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல் : மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியில், 600க்கும் மேற்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும், 19ல் நடக்கிறது.

நாமக்கல் லோக்சபா தொகுதியில், கடந்த மார்ச், 20 முதல், 27 வரை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. நாமக்கல்லில், 40 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஓட்டுப்பதிவிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் ஓட்டுகளை சரிபார்க்கும் விவிபேட் கருவிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில், பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.நாமக்கல் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சங்ககிரி, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு ஆகிய, 6 சட்டசபை தொகுதிகளில் உள்ள, 1,661 ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நேற்று முன்தினம் துவங்கியது.இப்பணியில், 600-க்கும் மேற்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரண்டாம் நாளாக, சம்பந்தப்பட்ட சட்டசபை தொகுதி மின்னணு பாதுகாப்பு அறையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்பணி முடிந்ததுடன், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்படும். ஓட்டுப்பதிவு நாள் அன்று, சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி மையங்களுக்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்படும். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சுகந்தி, பாலாகிருஷ்ணன், பிரபாகரன், கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us