sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ப.வேலுார் வாழைத்தார் ஏல சந்தையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

/

ப.வேலுார் வாழைத்தார் ஏல சந்தையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

ப.வேலுார் வாழைத்தார் ஏல சந்தையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

ப.வேலுார் வாழைத்தார் ஏல சந்தையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு


ADDED : செப் 09, 2025 02:39 AM

Google News

ADDED : செப் 09, 2025 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார், ப.வேலுார் வாழை மார்க்கெட்டில், வாழைத்தார்கள் மீது ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்டுள்ளதா என, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செயதனர்.

ப.வேலுார் பகுதிகளில் சுப முகூர்த்த நாட்களையொட்டி, வாழைப்பழம் தேவை அதிகரிப்பதால் வாழைத்தார் மீது, 'எத்திலின்' ரசாயனம் தெளித்து பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, நேற்று முன்தினம் நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து, நேற்று உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி, தன் குழுவினருடன் ப.வேலுார் தினசரி வாழைத்தார் ஏல சந்தையில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, வாழைத்தார்களை ஏலம் எடுத்த உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளிடம், ரசாயனம் தெளித்தோ, கார்பைடு கல் மூலம் வாழைத்தார்களை பழுக்க வைக்கவோ கூடாது. உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டப்படி வாழைத்தார்களை இயற்கையாக பழுக்க வைத்து விற்பனை செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் இது போன்ற ஆய்வு தொடர்ந்து நடத்தப்படும். ஆய்வில் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுத்தார்.






      Dinamalar
      Follow us