sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காவிரியில் கலந்து வீணாகும் திருமணிமுத்தாறு ஏரி, குளங்களில் சேமிக்க விவசாயிகள் கோரிக்கை

/

காவிரியில் கலந்து வீணாகும் திருமணிமுத்தாறு ஏரி, குளங்களில் சேமிக்க விவசாயிகள் கோரிக்கை

காவிரியில் கலந்து வீணாகும் திருமணிமுத்தாறு ஏரி, குளங்களில் சேமிக்க விவசாயிகள் கோரிக்கை

காவிரியில் கலந்து வீணாகும் திருமணிமுத்தாறு ஏரி, குளங்களில் சேமிக்க விவசாயிகள் கோரிக்கை


ADDED : அக் 10, 2024 03:02 AM

Google News

ADDED : அக் 10, 2024 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: காவிரியில் கலந்து வீணாகும் திருமணிமுத்தாறு தண்ணீரை, ஏரி, குளங்களில் நிரப்பி, நிலத்தடி நீர்மட்டம் உயர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே இடும்பன் குளம் ஏரி, 400 ஏக்கரில் அமைந்துள்ளது. சேலம் மாவட்டம், ஏற்காடு சேர்வரா-யன்மலையில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு, சேலம், பூலா-வரி, ஆட்டையாம்பட்டி, நாமக்கல் மாவட்டம் வெண்ணந்துார், கொன்னையாரு, மாணிக்கம்பாளையம், பரமத்தி வழியாக இடும்பன் குளம் ஏரியை அடைகிறது.அங்கிருந்து, ப.வேலுார் நன்செய் இடையாறு காவிரி ஆற்றில் சங்-கமிக்கிறது. இடும்பன் குளம் ஏரி நீரை பயன்படுத்தி, நுாற்றுக்க-ணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கோடைகாலத்தில் தண்ணீரின்றி வற்றிவிடுவதால், சுற்று வட்டா-ரத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, பாசன பரப்பளவும் குறைந்து விடுகிறது. இது, விவசாயிகளுக்கு கவலையை ஏற்ப-டுத்தி வருகிறது. தொடர்ந்து, நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருந்தால், பயிர் சாகுபடியும் தடையின்றி மேற்கொள்ளப்படும். சுற்று வட்டார மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்து, அவர்க-ளது பொருளாதாரம் உயரும்.

இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: இடும்பன் குளம் ஏரி நிரம்பி, அதன் உபரி நீர், திருமணி முத்தாறு வழியாக, நன்செய் இடையாறு காவிரி ஆற்றில் கலந்து வீணாகிறது. அவற்றை தவிர்த்து, திருமணி முத்தாறு பாய்ந்தோடும் பகுதி-களில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீரை திருப்பி நிரப்ப வேண்டும். அதன் மூலம், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், பாசனத்துக்கும் தடையின்றி தண்ணீர் கிடைக்கும். மக்கள் பயன்-பாட்டுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. மேலும், இடும்பன் குளம் துார்வார வேண்டும். அதிலுள்ள கருவேல மரங்-களை அகற்றினாலே, கடல்போல் காட்சியளிக்கும். அவற்றை செயல்படுத்த, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us