/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மொபைல் டவர் அருகே வாலிபர் சடலமாக மீட்பு
/
மொபைல் டவர் அருகே வாலிபர் சடலமாக மீட்பு
ADDED : டிச 19, 2025 06:13 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, மொபைல்போன் டவர் பகுதியில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த ஈஸ்வரமூர்த்தி பாளையம், ஊதபட்டியார் தோட்டத்தை சேர்ந்தவர் முத்துலிங்கம், 65. இவரது தோட்டத்தில் உள்ள, மொபைல்போன் டவர் அருகே, 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதை பார்த்த முத்துலிங்கம் மங்களபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், இறந்தவர் ஈஸ்வரமூர்த்திபாளையம் தெற்கு காடு பகுதியை சேர்ந்த சகாதேவன் மகன் பெரியசாமி, 30, என்பது தெரிந்தது. கூலித் தொழிலாளியான இவருக்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.இந்நிலையில் கடந்த, 17ம் தேதி இரவு வீட்டிலிருந்து சென்ற பெரியசாமி மீண்டும் வீடு திரும்பவில்லை. நேற்று காலை முத்துலிங்கம் தோட்டத்தில் உள்ள டவர் அருகே, பெரியசாமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட அவர், டவர் மீது ஏறி தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில், மங்களபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

