sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தார்ச்சாலை பணி தொடங்காததால் உண்ணாவிரதம் இருக்க பா.ஜ., முடிவு

/

தார்ச்சாலை பணி தொடங்காததால் உண்ணாவிரதம் இருக்க பா.ஜ., முடிவு

தார்ச்சாலை பணி தொடங்காததால் உண்ணாவிரதம் இருக்க பா.ஜ., முடிவு

தார்ச்சாலை பணி தொடங்காததால் உண்ணாவிரதம் இருக்க பா.ஜ., முடிவு


ADDED : அக் 29, 2024 01:12 AM

Google News

ADDED : அக் 29, 2024 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தார்ச்சாலை பணி தொடங்காததால்

உண்ணாவிரதம் இருக்க பா.ஜ., முடிவு

நாமகிரிப்பேட்டை, அக். 29-

நாமகிரிப்பேட்டை யூனியன், மூலக்குறிச்சியில் இருந்து பெரிய கோம்பை செல்லும் சாலை அமைக்க, பிரதமரின் கிராம சதக் யோஜனா திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக டெண்டர் விடப்பட்டு, ஐந்து மாதங்களாகியும் வேலை தொடங்காமல் இருந்தது. கடந்த மாதம், 22ல் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பூமி பூஜை செய்து சாலைப்பணியை தொடங்கி வைத்தார். ஆனாலும், இதுவரை பணிகள் தொடங்கவில்லை.

இதுகுறித்து, தமிழக பா.ஜ., மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவின் மாநில துணைத்தலைவர் லோகோந்திரன் வெளியிட்ட அறிக்கை:

கிராம சாலைகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதன் கீழ் மூலக்குறிச்சியில் சாலை அமைக்க, கடந்த, 5 மாதங்களுக்கு முன் டெண்டர் விடப்பட்டது. கடந்த மாதம் அமைச்சர் மதிவேந்தன் பூமி பூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தார்.

ஆனாலும், இதுவரை பணிகள் எதுவும் தொடங்கவில்லை. மத்திய அரசு ஒதுக்கும் நிதியிலும் ஒரு தலைபட்சமாக மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இதனை கண்டித்து, பா.ஜ., கட்சி சார்பில் பொதுமக்களுடன் சேர்ந்து தார்ச்சாலை பணி தொடங்கும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். உண்ணாவிரதம், நவ., 4ல் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us