sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தொடர் விழிப்புணர்வால் 3 ஆண்டுகளில் 172 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

/

தொடர் விழிப்புணர்வால் 3 ஆண்டுகளில் 172 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

தொடர் விழிப்புணர்வால் 3 ஆண்டுகளில் 172 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

தொடர் விழிப்புணர்வால் 3 ஆண்டுகளில் 172 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்


ADDED : டிச 29, 2024 01:26 AM

Google News

ADDED : டிச 29, 2024 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், டிச. 29-

நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் மாவட்டத்தில், தொடர் விழிப்புணர்வு காரணமாக, 2022ல், 165 -குழந்தை திருமணங்கள் கண்டறியப்பட்டன. 2023ல், 117, நடப்பாண்டில், 74 -என, படிப்படியாக குறைந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், குழந்தை திருமணங்கள் குறித்து, 2022ல், 230 புகார் பெறப்பட்டு, 65 திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 165 புகார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2023ல், 171 புகாரில், 54 திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், 114 புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடப்பு, 2024ல், கடந்த நவ., வரை, 127 புகார்கள் பெறப்பட்டு, 53 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதில், 54 புகார்கள் மீது போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த, 3 ஆண்டுகளில், 528 புகாரில், 172 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், 333 புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தை, 100 சதவீதம் குழந்தை திருமணம் இல்லாத மாவட்டமாக உருவாக்க பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us