ADDED : நவ 17, 2024 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு அஸ்தர தேவருக்கு தீர்த்த உற்ஸவம் நடந்தது.
பல்லக்கில் அஸ்தரதேவர் சரவணப்பொய்கை கொண்டு செல்லப்பட்டார். ஆறுமுக சுவாமி சன்னதி முன்பு யாகம் வளர்க்கப்பட்டு, பூஜை முடிந்து சரவண பொய்கை தண்ணீரில் அஸ்தர தேவருக்கு பால், மஞ்சள் பொடி, திரவியப்பொடி உள்பட 16 வகை அபிஷேகம் முடிந்து தீர்த்த உற்ஸவம் நடந்தது. பால்சுனை கண்ட சிவபெருமானுக்கு அபிஷேகம், பூஜை முடிந்து சிறப்பு அலங்காரமானது.
மாத பிறப்பை முன்னிட்டு நேற்று காலை சரவணப் பொய்கையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி ஐயப்பன், முருகனுக்கு மாலை அணிந்து கொண்டனர். சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலஸ்தானத்திலும், அனைத்து ஐயப்பன் கோயில்களிலும் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர்.

