ADDED : ஜூலை 10, 2025 03:04 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை கல்லுாரியில் தேசிய மாணவர் தினத்தை முன்னிட்டு 'மகிழ்ச்சியான அர்த்தமுள்ள மாணவர் வாழ்க்கை' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
சிறப்பு விருந்தினரான தியாகராஜர் கல்லுாரி உதவிப் பேராசிரியர் எழில் பரமகுரு, மாணவர்களுக்கு நல்லொழுக்கம், போதை இல்லா மாணவர் சமுதாயம், முன்னேற்றத்திற்கான வழிகள் குறித்து பேசினார். கல்லுாரி சுயநிதிப் பிரிவு இயக்குநர் நாகராஜன், மாணவர் ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் பங்கேற்றனர்.
