sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கொள்முதல் மையம் திறக்காததால் மழைக்கு முளைத்த நெல்மணிகள்

/

கொள்முதல் மையம் திறக்காததால் மழைக்கு முளைத்த நெல்மணிகள்

கொள்முதல் மையம் திறக்காததால் மழைக்கு முளைத்த நெல்மணிகள்

கொள்முதல் மையம் திறக்காததால் மழைக்கு முளைத்த நெல்மணிகள்


ADDED : ஏப் 08, 2025 04:47 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 04:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சோழவந்தான் அருகே முள்ளிபள்ளத்தில் நெல் கொள்முதல் மையம் திறக்காததால் நெல் குவியலை பாதுகாக்க விவசாயிகள் சிரமப்படுகின்றனர். மழையில் நனைந்து நெல் மணிகள் முளைத்து வீணாகின்றன.

இப்பகுதியில் தென்கரை கண்மாய் மற்றும் கால்வாய் பாசனத்தில் 500 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட நெல் அறுவடை பணிகள் துவங்கியுள்ளன. காடுபட்டி ரோட்டில் நெல் கொள்முதல் மையம் செயல்படும் களத்தில் அறுவடை செய்த 250 ஏக்கர் நெல்லை குவித்து வைத்துஉள்ளனர்.

20 நாட்களாக மையம் திறக்காத நிலையில் சமீபத்திய மழைக்கு நெல் குவியல் ஓரங்களில் முளைத்து விட்டன. தார்ப்பாய் போர்த்தி முடியும் உள்ளே ஈரப்பதம் அதிகரித்துள்ளது. நெல்லை பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் தனியாருக்கு குறைந்த விலைக்கு விற்க துவங்கியுள்ளனர்.

விவசாயி சேதுராமன்: ஏக்கருக்கு 40 மூடை வரும். ஆனால் கடந்தஆண்டு ஒன்றரை ஏக்கருக்கு 15ம், தற்போது 2 ஏக்கருக்கு 27 மூடை என மகசூல் பாதித்தது. மையம் திறக்காததால் தனியாருக்கு கிலோவிற்கு ரூ.4 குறைவாக விற்று விட்டோம் என்றார்.






      Dinamalar
      Follow us