sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

'ஓவர்சீயருக்கு ஓவருங்க...' இடமாறுதலின்றி ஒரே இடம்

/

'ஓவர்சீயருக்கு ஓவருங்க...' இடமாறுதலின்றி ஒரே இடம்

'ஓவர்சீயருக்கு ஓவருங்க...' இடமாறுதலின்றி ஒரே இடம்

'ஓவர்சீயருக்கு ஓவருங்க...' இடமாறுதலின்றி ஒரே இடம்


ADDED : ஏப் 05, 2025 05:01 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் நீண்டகாலமாக ஒரே ஒன்றியத்தில் பணியாற்றும் பணி மேற்பார்வையாளர்களுக்கு (ஓவர் சீயர்கள்) இடமாறுதல் வழங்கப்படுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் இந்த 'ஓவர்சீயர்' 3 அல்லது 4 பேர் பணியாற்றுகின்றனர். மதுரை மாவட்டத்தில் 13 ஒன்றியங்கள் உள்ளன. இவர்கள் ஒன்றிய பொறியாளர்களின் கீழ், வளர்ச்சித் துறையில் ரூ. 2 லட்சம் மதிப்பீட்டுக்கு குறைவான திட்டங்களை அனுமதித்து பணிகள் மேற்பார்வையிடுவர்.

மேலும் மகாத்மா காந்தி ஊரக பணிகளில் நடக்கும் வேலைகளையும் கண்காணிப்பர். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இவர்களை இடமாறுதல் செய்ய வேண்டும் என்பது விதி.

அதற்கு மாறாக நீண்ட காலமாக 35 பேர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் உள்ளதால் மனஉளைச்சலில் உள்ளனர்.

நீண்டகாலமாக இருப்பதால் அந்தந்த பகுதியில் ஊழியர்கள், பொதுமக்கள் சிலரோடு மனத்தாங்கலும் ஏற்பட்டு விடுகிறது. இடமாறுதல் வழங்க கலெக்டர் சங்கீதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us