ADDED : செப் 11, 2025 05:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை 'ஏ' மண்டல ஆடவர் கல்லுாரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில் யாதவர் கல்லுாரி அணி முதலிடம் பெற்றது.
முதல் அரையிறுதிப் போட்டியில் யாதவர் கல்லுாரி 44 - 35 புள்ளிகளில் தியாகராஜர் கல்லுாரியை வீழ்த்தியது. அடுத்த அரையிறுதிப் போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி 35 -- 23 புள்ளிகளில் சுப்ப லட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியை வீழ்த்தியது.
இறுதிப் போட்டியில் யாதவர் கல்லுாரி 26 - 22 புள்ளிகளில் அமெரிக்கன் கல்லுாரியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. தியாகராஜர் கல்லுாரி மூன்றாமிடம் பெற்றது. முதல்வர் ராஜூ, உடற்கல்வி இயக்குநர் நெல்சன் எட்வர்ட் ஞானஜோயல் பாராட்டினர்.