/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கடத்தல்காரர்கள் எனக்கு தந்தது ஒரு உடை, ஒரு வேளை சாப்பாடு; மீட்கப்பட்ட மதுரை தொழிலதிபர் பேட்டி
/
கடத்தல்காரர்கள் எனக்கு தந்தது ஒரு உடை, ஒரு வேளை சாப்பாடு; மீட்கப்பட்ட மதுரை தொழிலதிபர் பேட்டி
கடத்தல்காரர்கள் எனக்கு தந்தது ஒரு உடை, ஒரு வேளை சாப்பாடு; மீட்கப்பட்ட மதுரை தொழிலதிபர் பேட்டி
கடத்தல்காரர்கள் எனக்கு தந்தது ஒரு உடை, ஒரு வேளை சாப்பாடு; மீட்கப்பட்ட மதுரை தொழிலதிபர் பேட்டி
ADDED : ஏப் 24, 2025 03:51 AM

மதுரை: ''சொத்துக்கான கடத்தப்பட்ட என்னை கடத்தல்காரர்கள் அடித்ததோடு, ஒரு உடையும், ஒரு வேளை சாப்பாடும் மட்டும் தந்தனர்'' என 12 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட மதுரை தொழிலதிபர் கருமுத்து சுந்தரம் தெரிவித்தார்.
மதுரை நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் கருமுத்து சுந்தரம் 58. மதுரையில் கல்வி நிறுவனங்கள், மில்களை உருவாக்கிய கருமுத்து தியாகராஜர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.இவரது குடும்பத்திற்கு சொந்தமானதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரூ.பல கோடி மதிப்புள்ள 6 ஏக்கர் சொத்தைதிண்டுக்கல்மரியராஜ் 70, என்பவர் அபகரிக்க திட்டமிட்டு ஏப்.,6ல்கூட்டாளிகளுடன் சேர்ந்து கடத்தினார்.
தினமும் ஒவ்வொரு இடம் வீதமாகமகாராஷ்டிரா, நாக்பூர், ஆந்திரா, பெங்களூரு எனகடத்திச்சென்றனர். மதுரை போலீசார் தொடர்ந்து கண்காணித்து ஏப்.18 ல் மீட்டனர். இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
நமது நிருபரிடம் சுந்தரம் கூறியதாவது:
ஒவ்வொரு இடமாக அழைத்துச்சென்றனர். மருந்து, மாத்திரை எடுத்துச்செல்லாததால் சிரமப்பட்டேன். ஒரு வேளை உணவு மட்டுமே தந்தனர். அதேசமயம் அவர்கள் தினமும் மது அருந்தினர்.
கடத்தியதும் என்னை கம்பால் காலில் அடித்தனர். பிறகு அவ்வப்போது அடிப்பது போல் மிரட்டினர். காலில் அடிக்காமல் தரையில் கம்பை ஓங்கி அடித்து பயமுறுத்தினர். நான் எதற்கும் பயப்படவில்லை.
அவர்களிடம் இருந்த 12 நாளில் ஒரு புது ஆடை மட்டும் வாங்கிக்கொடுத்தனர். அதைதான் மாற்றி மாற்றி அணிந்து சமாளித்தேன். இவ்வாறு கூறினார்.

