sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விதி மாற நிதி வேணும்: பெருமழை வந்தால் செல்லுார் கண்மாய்க்கு ஆபத்து வரலாம்

/

விதி மாற நிதி வேணும்: பெருமழை வந்தால் செல்லுார் கண்மாய்க்கு ஆபத்து வரலாம்

விதி மாற நிதி வேணும்: பெருமழை வந்தால் செல்லுார் கண்மாய்க்கு ஆபத்து வரலாம்

விதி மாற நிதி வேணும்: பெருமழை வந்தால் செல்லுார் கண்மாய்க்கு ஆபத்து வரலாம்

1


ADDED : அக் 07, 2024 05:23 AM

Google News

ADDED : அக் 07, 2024 05:23 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: முதல் சட்டசபை கூட்டத் தொடரில் முதல்வர் அறிவித்தபடி மதுரை செல்லுார் கண்மாய் சீரமைப்புக்கு இதுவரை நிதி ஒதுக்காத நிலையில், வெள்ளம் வந்தால் கண்மாய் உடையும் அபாயம் உள்ளது.

மதுரை செல்லுார் கண்மாய் 1050 மீட்டர் நீளமுடையது. நேரடி ஆயக்கட்டு பகுதியாக இருந்த கண்மாய்க்கு தத்தனேரி கண்மாய் வழியாக உபரிநீர் கிடைக்கிறது. இதற்கு இரண்டு மடைகள் இருந்தன. செல்லுார் பகுதி குடியிருப்புகளாக மாறியதால் மடைகள் தானாக அடைபட்டுப் போயின. இதை கைவிடப்பட்ட கண்மாயாக நீர்வளத்துறை அறிவித்தது.

செல்லுாரை அழித்த வெள்ளம்


பாசனத்திற்கு பயன்படாவிட்டாலும் தற்போது வரை இத்துறையின் கட்டுப்பாட்டில் கண்மாய் உள்ளது. மடைகள் அடைபட்டதால் கண்மாய் நிறைந்து மறுகால் பாய்வதற்காக ஒரு கலுங்கின் வழியாக வினாடிக்கு 75 கனஅடி நீர் வெளியேறும் வசதி செய்யப்பட்டது.

கடந்த 1996 பெருமழையால் வெள்ளம் வந்த போது இங்குள்ள சிறிய கலுங்கு வழியாக தண்ணீர் வெளியேற முடியாமல் கண்மாய் உடைந்து வெள்ளம் வெளியேறியது. செல்லுார் பகுதி குடியிருப்புகள், மீனாட்சி அரசு கல்லுாரி, மதுரை அரசு மருத்துவமனை வரை வெள்ளம் சூழ்ந்தது. எனவே பத்தாண்டுக்கு முன் கண்மாயின் வலது ஓரத்தில் வெள்ளநீர் வெளியேற 5 ஷட்டர்கள் வைக்கப்பட்டன. ஆனால் ஷட்டரில் இருந்து 240 மீட்டர் துாரத்தில் உள்ள வைகையாற்றில் வெள்ளநீர் வடிவதற்கென வாய்க்கால் தோண்டவில்லை. இந்த வழியாக ரோடு செல்வதால் ரோட்டை தோண்டி தண்ணீர் செல்ல வழி ஏற்படுத்தி மேற்பகுதியில் வாகனங்கள் செல்ல (கட் அன்ட் கவர் சானல்) திட்டமிடப்பட்டது. நிதியில்லை என்ற காரணத்தால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

முதல்வர் அறிவித்த நிதி


முதல்வர் ஸ்டாலின் 2021 ல் முதல் சட்டசபை கூட்டத்தொடரில் செல்லுார் கண்மாய் சீரமைப்பு, ஷட்டரில் இருந்து வைகையாறு வரையான 240 மீட்டர் துார வாய்க்கால், 2.6 கி.மீ., நீளத்திற்கான பந்தல்குடி கால்வாயை சீரமைத்தல் உட்பட பல பணிகளுக்கு ரூ.84 கோடி நிதி வழங்க ஒப்புதல் அளித்தார். மூன்றாண்டுகளாகியும் நிர்வாக அனுமதி கிடைக்காததால் நிதியும் கிடைக்கவில்லை.

செல்லுார் கண்மாயின் நடுவே மதுரை - சென்னை வழித்தடம் உள்ளது. 1996 ல் வெள்ளம் வந்தபோது பல மணி நேரம் ரயில்சேவை முடங்கியது. இந்தாண்டு வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. திடீர் மழையால் வெள்ளம் அதிகரித்தால் கண்மாய் உடையும் அபாயம் உள்ளது. எனவே தாமதிக்காமல் ஒப்புதல் அளித்த நிதியை விடுவிக்க அரசு முன்வரவேண்டும்.






      Dinamalar
      Follow us