sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ரேஷன் முறைகேடுக்கு ரூ. 3 லட்சம் அபராதம் பொருள் இருப்பு குறைவால் நடவடிக்கை

/

ரேஷன் முறைகேடுக்கு ரூ. 3 லட்சம் அபராதம் பொருள் இருப்பு குறைவால் நடவடிக்கை

ரேஷன் முறைகேடுக்கு ரூ. 3 லட்சம் அபராதம் பொருள் இருப்பு குறைவால் நடவடிக்கை

ரேஷன் முறைகேடுக்கு ரூ. 3 லட்சம் அபராதம் பொருள் இருப்பு குறைவால் நடவடிக்கை


ADDED : அக் 12, 2024 04:43 AM

Google News

ADDED : அக் 12, 2024 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மேலுார் அருகே கச்சிராயன்பட்டி ரேஷன் கடையில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் பொருள் இருப்பு அளவு குறைந்ததால் விற்பனையாளருக்கு ரூ.3.11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கச்சிராயன்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் முறைகேடு நடப்பதாக பொது வினியோகத்துறை அலுவலருககு பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து வட்ட வழங்கல் அலுவலர் கார்த்திக்பாபு தலைமையில் கூட்டுறவு சார்பதிவாளர் சீனியப்பா, செயலாளர் கணேசன், வருவாய் ஆய்வாளர் பொன்னையா ஆகியோர் அக்கடையில் கூட்டுத் தணிக்கை மேற்கொண்டனர்.

இதில் அங்குள்ள பி.எஸ்.ஓ., (பாயின்ட் ஆப் சேல்) கருவியில் விற்பனை செய்த அளவுக்கும், கடையில் இருந்த பொருட்களின் இருப்பு அளவுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருந்ததை கண்டறிந்தனர்.

அரிசி 5.392 டன், சர்க்கரை 336 கிலோ மற்றும் கோதுமை, துவரம்பருப்பு, மண்ணெண்ணெய், பாமாயில் உட்பட பல்வேறு பொருட்களின் அளவு இருப்பு குறைந்துள்ளது.இதையடுத்து விற்பனையாளர் ரவிக்கு ரூ.3.11 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட வினியோக அலுவலருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us