sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இறுதிச்சடங்கு கூட வசதியின்றி அவதி

/

இறுதிச்சடங்கு கூட வசதியின்றி அவதி

இறுதிச்சடங்கு கூட வசதியின்றி அவதி

இறுதிச்சடங்கு கூட வசதியின்றி அவதி


ADDED : டிச 16, 2024 06:37 AM

Google News

ADDED : டிச 16, 2024 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அலங்காநல்லுார் : மதுரை மேற்கு ஒன்றியம் அதலை ஊராட்சியில் இறந்தவர்களுக்கு ஈமச்சடங்கு செய்ய குடிநீர் மற்றும் தொட்டி வசதி இல்லாமல் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.

இக்கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இறந்தவர்களை அடக்கம் செய்யும் முன் நடக்கும் இறுதிச்சடங்குகளை செய்யும் இடத்தில் தண்ணீர் வசதியில்லை.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே பரவை ரோட்டில் இருந்த போர்வெல் சில ஆண்டுகளுக்கு முன் பழுதானது. அங்கிருந்த தண்ணீர் தொட்டியும் மாயமானது.

வி.சி.க., நிர்வாகி மணி கூறுகையில், ''அடிகுழாயாக இருந்தபோது பயன்படுத்தி வந்தோம். 2014ல் அமைத்த தண்ணீர் தொட்டி தற்போது இல்லை. எனவே 4 ஆண்டுகளாக டிரம்மில் தண்ணீரை கொண்டு சென்று இறுதிச் சடங்கிற்கு பயன்படுத்துகிறோம். தண்ணீர் தொட்டி கேட்டு ஊராட்சி, ஒன்றிய நிர்வாகம், கலெக்டரிடம் மனுக்கள் அளித்துள்ளேன் என்றார்.






      Dinamalar
      Follow us