ADDED : மார் 08, 2024 01:13 AM
அ நிறம் | அளவு
மதுரை: தேர்தல் பத்திரங்கள் சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.,வை காப்பாற்றும் வகையில் தடயங்களை ஸ்டேட் வங்கி மறைப்பதாக கூறி மதுரையில் நகர் காங்., சார்பில் ஸ்டேட் வங்கி மண்டல அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் செய்யதுபாபு, கவுன்சிலர் முருகன், சிறுபான்மை பிரிவு தலைவர் அப்துல் மாலிக், வர்த்தக பிரிவு பொது செயலாளர்கள் நல்லமணி, அசார் உசேன், விவசாய அணி ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
