sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மழையால் 'அலர்ட்' ! மதுரை ரயில்வேயில் கூடுதல் பாதுகாப்பு பணியாளர்கள்; தடையின்றி ரயில்கள் செல்ல ரோந்து வாகனங்கள் தயார்

/

மழையால் 'அலர்ட்' ! மதுரை ரயில்வேயில் கூடுதல் பாதுகாப்பு பணியாளர்கள்; தடையின்றி ரயில்கள் செல்ல ரோந்து வாகனங்கள் தயார்

மழையால் 'அலர்ட்' ! மதுரை ரயில்வேயில் கூடுதல் பாதுகாப்பு பணியாளர்கள்; தடையின்றி ரயில்கள் செல்ல ரோந்து வாகனங்கள் தயார்

மழையால் 'அலர்ட்' ! மதுரை ரயில்வேயில் கூடுதல் பாதுகாப்பு பணியாளர்கள்; தடையின்றி ரயில்கள் செல்ல ரோந்து வாகனங்கள் தயார்


ADDED : மே 21, 2024 06:56 AM

Google News

ADDED : மே 21, 2024 06:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தொடர்ந்து பெய்து வரும் மழையால் தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்திற்குட்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் பாதுகாப்புக்கு கூடுதல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மழைக்காலங்களில் ரயில்வே தண்டவாள பகுதியில் மண்அரிப்பு, நீர்நிலைகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு ரயில்கள் செல்வதில் பாதிப்பு ஏற்படும். சில மாதங்களுக்கு முன் துாத்துக்குடியில் பெய்த கனமழையில் பயணிகள் ரயில் சிக்கிக்கொண்டது. பெரும் போராட்டத்திற்கு பின் அவர்கள் மீட்கப்பட்டனர். அதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காத வகையில் ரயில்வே நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளவ.

மின்இணைப்புகளில் உள்ள குறைபாடுகள், இவற்றை சரி செய்ய கீமேன் முதல் பொறியாளர் வரை 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிக்னல் கிடைத்து குறிப்பிட்ட நேரத்தில் ரயில்கள் செல்லும் வகையில் ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷனிலும் கூடுதல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கீமேன்கள் ஆய்வு செய்யும் பகுதியில் தண்டவாளங்கள் சரியாக உள்ளன என்பதை ஸ்டேஷன் மேலாளர் உறுதி செய்வார். அதன் பிறகு ரயில் டிரைவர்களுக்கு சிக்னல் கொடுக்கப்படும். பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதையும், ஆபத்து உள்ள இடங்களில் ரயிலை நிறுத்தவும் ரயில்வே பாதுகாப்பு ரோந்து வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. தொடர் மழைகாலங்களில் விடுமுறையின்றி ரயில்வே ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.






      Dinamalar
      Follow us