ADDED : ஜூலை 28, 2025 03:33 AM
மதுரை, : மதுரை மாவட்டத்திற்கு விரைவில் மேலும் 68 தாழ்தள பஸ்களை அரசு வழங்க உள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மதுரையில் இயங்கும் பல பஸ்கள் மிகவும் பழைய பஸ்களாக உள்ளன. குறிப்பாக மகளிர்க்கான கட்டணமில்லா பஸ்கள் பலவும் அதரப் பழசாக இயங்குகின்றன.
கடந்த சில மாதங்களாக பழைய பஸ்களை மாற்றும் வகையில் புதிய வண்ணங்களில் பல பஸ்கள் உலா வருகின்றன.
குறிப்பாக மாற்றுத் திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் நீலநிற தாழ்தள பஸ்கள் அதிகளவில் வலம் வருகின்றன. மொபசல் பஸ்கள் மஞ்சள் நிறத்தில் ஓடுகின்றன. சில மாதங்களுக்கு முன் 100 தாழ்தள பஸ்கள் மதுரைக்கு ஒதுக்கப்பட்டது. அவற்றை மாட்டுத்தாவணியில் இருந்து அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.
இந்நிலையில் மேலும் 68 பஸ்கள் மதுரைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் ரூ.96 லட்சம் மதிப்பிலானவை. இவற்றை விரைவில் மதுரையில் பதிவு செய்து இயக்க மேலாண் இயக்குனர் சரவணன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அமைச்சரே விரைவில் இவற்றை துவக்கி வைக்க உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

