sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மலைமேல் வேல் எடுக்கும் விழா குன்றத்தில் செப். 27ல் வேல் எழுந்தருளல்

/

மலைமேல் வேல் எடுக்கும் விழா குன்றத்தில் செப். 27ல் வேல் எழுந்தருளல்

மலைமேல் வேல் எடுக்கும் விழா குன்றத்தில் செப். 27ல் வேல் எழுந்தருளல்

மலைமேல் வேல் எடுக்கும் விழா குன்றத்தில் செப். 27ல் வேல் எழுந்தருளல்


ADDED : செப் 17, 2024 05:18 AM

Google News

ADDED : செப் 17, 2024 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம், : திருப்பரங்குன்றத்தில் செப். 27ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் எடுக்கும் விழா நடக்க உள்ளது.

நக்கீரருக்கு சாப விமோசனம் கொடுக்க சுப்பிரமணிய சுவாமி தனது கரத்திலுள்ள வேல்மூலம் மலைமீது பாறையில் கீரி, கங்கைக்கு நிகரான தீர்த்தத்தை சுனையில் உருவாக்கியதை நினைவு கூறும் வகையிலும், மழை வேண்டியும், திருப்பரங்குன்றம் கோயில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கரத்திலுள்ள தங்க வேலை மலைமேல் கொண்டு செல்லும் விழா செப். 27ல் நடக்கிறது.

அன்று மூலவர் கரத்திலுள்ள தங்க வேலுக்கு சிறப்பு அபிஷேகங்கள் முடிந்து மலர்களால் அலங்கரிக்கப்படும். சிறப்பு மற்றும் பொது பூஜை முடிந்து கிராமத்தினருக்கு மரியாதை செய்யப்படும்.

பின்பு பல்லக்கில் வேலை வைத்து ரத வீதிகளில் உலா சென்று மலைமேல் கொண்டு செல்லப்படும். அங்கு சுப்பிரமணியர் கரத்தில் வேல் சேர்ப்பிக்கப்படும்.

உச்சி கால நேரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, பஞ்சலிங்கம், நந்தி, சண்டிகேஸ்வரர், கால பைரவருக்கு பூஜை முடிந்து, கோயில் சிவாச்சாரியார்களால் வேல், சுனை தீர்த்தத்திற்குள் எடுத்துச் செல்லப்பட்டு அபிஷேகங்கள் நடக்கும்.

கிராமத்தினர் சார்பில் 105 படி அரிசியில் கதம்ப சாதம் தயாரித்து பக்தர்களுக்கு வழங்கப்படும்.

மாலையில் வேல் புறப்பாடாகி மலை அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள பழனி ஆண்டவர் கரத்தில் சேர்ப்பிக்கப்படும். இரவு வேல், சுவாமிக்கு அபிஷேகங்கள், தீபாராதனைகளுக்குப்பின்பு பூப்பல்லக்கில் வேல் புறப்பாடாகி வீதி உலா முடிந்து சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர் கரத்தில் மீண்டும் சேர்ப்பிக்கப்படும்.






      Dinamalar
      Follow us