ADDED : மே 14, 2024 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மத்திய அரசின் தேசிய சணல் வாரியம் சார்பில் மதுரை எஸ்.எஸ்.காலனி வடக்குவாசல் பெட்கிராட் நிறுவனத்தில் பெண்களுக்கான இலவச சணல் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஜூட் பேக், லேப்டாப், லஞ்ச், ஸ்கூல், ஷாப்பிங் பேக் உட்பட 17 வகையான பைகள் தயாரிக்க 50 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 45 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் கைவினை கலைஞர்களுக்கான அடையாள அட்டை பெற்றுத்தரப்படும். தொழில் துவங்க மானியத்துடன் வங்கிக்கடன் பெற வழிகாட்டப்படும். தொடர்புக்கு : 89030 03090.

