ADDED : மார் 28, 2024 06:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை குலமங்கலம் வழக்கறிஞர் திருப்பதி. வீடு கட்டுமானத்திற்கு வரைபட அனுமதி கோரி 2013 ஜூலை 3ல் குலமங்கலம் ஊராட்சித் தலைவராக இருந்த மலைச்சாமியிடம் விண்ணப்பித்தார்.
ரூ.1500 லஞ்சம் கேட்டார். லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் திருப்பதி புகார் செய்தார். ரூ.1500 லஞ்சம் வாங்கியபோது போலீசாரிடம் மலைச்சாமி பிடிபட்டார். அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.2000 அபராதம் விதித்து மதுரை லஞ்ச ஒழிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாரதிராஜா உத்தரவிட்டார்.

