sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தேர் இழுக்க முறைப்படி கிராம மக்களுக்கு அழைப்பு திருப்பரங்குன்றத்தில் மார்ச் 29ல் தேரோட்டம்

/

தேர் இழுக்க முறைப்படி கிராம மக்களுக்கு அழைப்பு திருப்பரங்குன்றத்தில் மார்ச் 29ல் தேரோட்டம்

தேர் இழுக்க முறைப்படி கிராம மக்களுக்கு அழைப்பு திருப்பரங்குன்றத்தில் மார்ச் 29ல் தேரோட்டம்

தேர் இழுக்க முறைப்படி கிராம மக்களுக்கு அழைப்பு திருப்பரங்குன்றத்தில் மார்ச் 29ல் தேரோட்டம்


ADDED : மார் 23, 2024 05:51 AM

Google News

ADDED : மார் 23, 2024 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா தேரோட்டம் மார்ச் 29ல் நடக்கிறது. தேரை வடம் பிடித்து இழுக்க பாரம்பரிய முறைப்படி கிராமத்தினரை அழைக்கும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது.

பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் மார்ச் 28ல் நடக்கிறது. மறுநாள் கோயில் முன்பு நிலை நிறுத்தப்பட்டுள்ள பெரிய வைரத் தேரில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருள திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள 43 கிராமத்தினர் வடம் பிடித்து இழுக்க மலையைச் சுற்றி தேர் வலம் வரும்.

தேர் இழுக்க முக்கியஸ்தர்கள், கிராமத்தினரை அழைக்கும் நிகழ்ச்சி கோயில் முதல் ஸ்தானிக சிவாச்சாரியார் சுவாமிநாதன் தலைமையில் நேற்று துவங்கியது.

சங்கர் ஸ்தானிகர், கிராம நாட்டாமை சண்முகசுந்தரம், வைராவி செல்வகுமார், காவல் தலையாரி மகாராஜன், மிராசு காவல்காரர்கள் வீடு வீடாகச் சென்று வெற்றிலை, பாக்கு, திருவிழா பத்திரிக்கை, விபூதி, சந்தனம் கொடுத்து அழைத்தனர். பல ஆண்டுகளாக பாரம்பரிய முறைப்படி இந்த அழைப்பு நடப்பது குறிப்பிடத்தக்கது.

நாளை பங்குனி உத்திரம்

அழகர்கோவில்: சோலைமலை முருகன் கோயிலில் நாளை (மார்ச் 24) பங்குனி உத்திரம் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள 18ம் படி கருப்பணசாமி கோயிலில் இருந்து, 108 பால் குடங்களை பக்தர்கள் பாதயாத்திரையாக எடுத்துச் செல்கின்றனர். மதியம் 12:00 மணிக்கு உச்சிகால பூஜை, பாலாபிஷேகம், தீபாராதனைக்கு பிறகு சுவாமி புறப்பாடு நடைபெறும்.








      Dinamalar
      Follow us