/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வருவாய்த்துறையினர் 12வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டம்
/
வருவாய்த்துறையினர் 12வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டம்
வருவாய்த்துறையினர் 12வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டம்
வருவாய்த்துறையினர் 12வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டம்
ADDED : மார் 09, 2024 12:57 AM
கிருஷ்ணகிரி, வருவாய்த்துறையினர், 12வது நாளாக தொடர் வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 7 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தற்போது கோரிக்கைகள் நிறைவேறும் வரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், 5 நாட்களாக தொடர் வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார்.
துணை தாசில்தார் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை உடனே வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என கூறினர். வட்டக்கிளைத் தலைவர் குமரேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

