/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் சாவு
/
மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் சாவு
ADDED : பிப் 21, 2024 01:35 AM
கிருஷ்ணகிரி:மாரடைப்பால் மகன் இறந்த அதிர்ச்சியில், தாயும் மாரடைப்பால் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி
நகராட்சி லண்டன்பேட்டையை சேர்ந்தவர் சாந்தம்மாள், 80; இவரது கணவர்
ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு, 4 மகள்கள், 3 மகன்கள். கடைசி மகன்
இன்பராஜ், 47, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு
திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இன்பராஜிக்கு கடந்த, 3
மாதங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்
உயிர் பிழைத்தார். நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு இன்பராஜிக்கு நெஞ்சு
வலி ஏற்பட்டதால், கிருஷ்ணகிரியிலுள்ள தனியார் மருத்துவமனையில்
சேர்த்த நிலையில், சிறிது நேரத்தில் இறந்தார்.
இதையறிந்த அவரது தாய்
சாந்தம்மாளுக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டது. தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அதிகாலை 4:00 மணிக்கு
இறந்தார். மாரடைப்பால் ஒரே குடும்பத்தில் இருவர் இறந்தது அப்பகுதியில்
பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

