ADDED : டிச 25, 2024 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீட்டுமனை பட்டா கேட்டு மனு
ஊத்தங்கரை, டிச. 25-
ஊத்தங்கரை அடுத்த, சிங்காரப்பேட்டை கென்னடி நகரை சேர்ந்த பொதுமக்கள், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி நேற்று, பா.ஜ., மாவட்ட செயலாளர் வரதராஜன் தலைமையில், ஊத்தங்கரை தாசில்தார் திருமாலிடம் புகார் மனு கொடுத்தனர். இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பட்டா கேட்டு மனு கொடுத்தனர். இதில், சத்தியமூர்த்தி, சரவணகுமார், சிவக்குமார் உள்பட பா.ஜ., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

