sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கோடை உழவில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்

/

கோடை உழவில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்

கோடை உழவில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்

கோடை உழவில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்


ADDED : ஏப் 18, 2025 01:21 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: நன்கு ஆழமாக சட்டி கலப்பை கொண்டு உழும்போது, கீழ் மண் மேலாகவும், மேல் மண் கீழாகவும் மாறும். இதனால் மண்ணில் உள்ள சத்துக்கள் சீராக பரவுவதால், சத்து பற்றாக்குறை குறைய வழி ஏற்படுகிறது. கோடை உழவு செய்வதால், மண்ணின் அடியில் உள்ள பயிர்களை உண்ணும் மற்றும் பல நோய்களை கடத்தும் பூச்சிகளின் முட்டைகள், புழுக்கள் வெளியே கொண்டு வரப்பட்டு, சூரிய ஒளி மற்றும் வெப்பத்தால் கொல்லப்படும்.

கோடை உழவு செய்யும்போது, மண்ணிலிருந்து வெளிவரும் சிறு பூச்சிகள், கூட்டுப்புழுக்கள் போன்றவற்றை பறவைகள் கொத்தித்தின்று அவைகளை அழித்து விடுவதால், அடுத்து சாகுபடி செய்யும் பயிரில், பூச்சி நோய் தாக்குதல் இயற்கையான முறையிலேயே கட்டுப்படுத்த ஏதுவாகின்றது. மறு உழவு செய்யும்போது, களை செடிகள் மடக்கி உழப்பட்டு, மீண்டும் களைகள் வளராமல் தடுப்பதால், செலவு மற்றும் நேரம் சேமிக்கப்படுகின்றது.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us