/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரியில் சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் கனமழை
/
கிருஷ்ணகிரியில் சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் கனமழை
கிருஷ்ணகிரியில் சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் கனமழை
கிருஷ்ணகிரியில் சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் கனமழை
ADDED : மே 23, 2024 07:11 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில், நேற்று மாலை, 5:20 மணிக்கு, சூறாவளிக் காற்று, இடி, மின்னலுடன் கூடிய கனமழை, 6:00 மணி வரை நீடித்தது. சூறாவளிக் காற்றால், நகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன.
கிருஷ்ணகிரி -- சேலம் சாலையில் பாதாள சாக்கடையில் மழைநீருடன், கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசியது. ரவுண்டனா பகுதி, பெங்களூரு சாலை, கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள மேம்பாலத்தின் அருகே செல்லும் சர்வீஸ் சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர். கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் எதிரே சாலையில் தேங்கிய மழைநீரை, தேசிய நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் உடனடியாக அகற்றினர். 30 நிமிடங்கள் பெய்த மழையால் நகரில் பல்வேறு இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.
நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓசூரில், 40.3 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதே போல், நெடுங்கல், 33, பெணுகொண்டாபுரம், 17.2, கிருஷ்ணகிரி, 16, கெலவரப்பள்ளி, கே.ஆர்.பி., அணைகளில் தலா, 9, போச்சம்பள்ளி, 8.5, பாம்பாறு அணை, ராயக்கோட்டையில் தலா, 7, பாரூர், 6.8, ஊத்தங்கரை, 6.6, அஞ்செட்டி, 5.4, சூளகிரி, 5, சின்னாறு அணை, 4, தேன்கனிக்கோட்டை, 3 என மொத்தம், 178 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.

