/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சீரான குடிநீர் வழங்க உரிய கண்காணிப்பு
/
சீரான குடிநீர் வழங்க உரிய கண்காணிப்பு
ADDED : ஏப் 23, 2024 04:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி-கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் குறித்து, 'காலைக்கதிர்' நாளிதழில் செய்தி வெளியானது.
இது குறித்து ஊத்தங்கரை பி.டி.ஓ., பாலாஜி கூறுகையில், “ஊத்தங்கரை ஒன்றியம், புதுார்புங்கனை ஊராட்சி, மண்ணாடிபட்டி குடியிருப்பு பகுதியில், மண்டல துணை வட்டார அலுவலர் நேரடியாக ஆய்வு செய்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் வினியோகம் நடக்கிறது. மேலும், குடிநீர் வினியோகம் தொடர்பாக எவ்வித புகார்களும் வரப்பெறாத வகையில், உரிய கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என்றார்.

