sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

22 டன் ரேஷன் அரிசி பறிமுதல் லாரியில் கடத்திய 5 பேர் கைது

/

22 டன் ரேஷன் அரிசி பறிமுதல் லாரியில் கடத்திய 5 பேர் கைது

22 டன் ரேஷன் அரிசி பறிமுதல் லாரியில் கடத்திய 5 பேர் கைது

22 டன் ரேஷன் அரிசி பறிமுதல் லாரியில் கடத்திய 5 பேர் கைது


ADDED : ஏப் 11, 2024 12:08 PM

Google News

ADDED : ஏப் 11, 2024 12:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்கண்ணன், சங்கீதா எஸ்.ஐ.,க்கள் பெரியசாமி, பெருமாள், அருள்பிரகாஷ், மூர்த்தி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, காவேரிப்பட்டணம் அடுத்த ஜெகதாப்பில், சேலம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வந்த ஈச்சர் லாரியை மடக்கி சோதனையிட்டனர். அதில், 50 கிலோ அளவிலான, 452 மூட்டைகளில், 22,600 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரிந்தது. அப்போது, லாரிக்கு வழிக்காவலாக போர்டு பியஸ்டா கார் வந்ததும் தெரிந்தது.

இதையடுத்து லாரி மற்றும் கார்களில் இருந்த விருதுநகர் மாவட்டம், வெள்ளியம்பலத்தை சேர்ந்த ராமச்சந்திரன், 48, தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் சேட்டு, 28, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சுதாகர், 34, கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை நாகராஜ், 58, சேலம் மாவட்டம், ஓமலுார் ராமச்சந்திரன், 28 ஆகிய, 5 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரேஷன் அரிசியை வாங்கி, கர்நாடக மாநிலத்தில் அதிக விலைக்கு விற்க கொண்டு சென்றது தெரிந்தது.






      Dinamalar
      Follow us