/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
22 டன் ரேஷன் அரிசி பறிமுதல் லாரியில் கடத்திய 5 பேர் கைது
/
22 டன் ரேஷன் அரிசி பறிமுதல் லாரியில் கடத்திய 5 பேர் கைது
22 டன் ரேஷன் அரிசி பறிமுதல் லாரியில் கடத்திய 5 பேர் கைது
22 டன் ரேஷன் அரிசி பறிமுதல் லாரியில் கடத்திய 5 பேர் கைது
ADDED : ஏப் 11, 2024 12:08 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்கண்ணன், சங்கீதா எஸ்.ஐ.,க்கள் பெரியசாமி, பெருமாள், அருள்பிரகாஷ், மூர்த்தி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, காவேரிப்பட்டணம் அடுத்த ஜெகதாப்பில், சேலம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வந்த ஈச்சர் லாரியை மடக்கி சோதனையிட்டனர். அதில், 50 கிலோ அளவிலான, 452 மூட்டைகளில், 22,600 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரிந்தது. அப்போது, லாரிக்கு வழிக்காவலாக போர்டு பியஸ்டா கார் வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து லாரி மற்றும் கார்களில் இருந்த விருதுநகர் மாவட்டம், வெள்ளியம்பலத்தை சேர்ந்த ராமச்சந்திரன், 48, தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் சேட்டு, 28, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சுதாகர், 34, கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை நாகராஜ், 58, சேலம் மாவட்டம், ஓமலுார் ராமச்சந்திரன், 28 ஆகிய, 5 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரேஷன் அரிசியை வாங்கி, கர்நாடக மாநிலத்தில் அதிக விலைக்கு விற்க கொண்டு சென்றது தெரிந்தது.

