sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சரக்கு வாகனம் மரத்தில் மோதி இருவர் பலி; ஐந்து பேர் காயம்

/

சரக்கு வாகனம் மரத்தில் மோதி இருவர் பலி; ஐந்து பேர் காயம்

சரக்கு வாகனம் மரத்தில் மோதி இருவர் பலி; ஐந்து பேர் காயம்

சரக்கு வாகனம் மரத்தில் மோதி இருவர் பலி; ஐந்து பேர் காயம்


ADDED : ஜூலை 25, 2025 02:06 AM

Google News

ADDED : ஜூலை 25, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை:சாலையோர மரத்தின் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில், மரம் வெட்டும் கூலி தொழிலாளிகள் இருவர் இறந்தனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த கீரனுாரை சேர்ந்த மரம் வெட்டும் கூலி தொழிலாளர்கள், நேற்று முன்தினம் 'டாடா ஏஸ்' சரக்கு வாகனத்தில், வெட்டிய மரங்களை ஏற்றிக்கொண்டு, திண்டுக்கல் மாவட்டம், கூடலுார் பகுதிக்கு சென்றனர்.

அங்கு மரங்களை விற்பனை செய்து விட்டு, இரவு அதே வாகனத்தில் பி.உடையாபட்டி, கீரனுார் சாலையில் திரும்பி வந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம், சாலையோர வேப்ப மரத்தில் மோதி கவிழ்ந்தது.

விபத்தில், மரம் வெட்டும் கூலி தொழிலாளி சாமிப்பிள்ளை புதுாரை சேர்ந்த வீரமலை, 65, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கீரனுார் மீனாட்சிபுரத்தை சேர்ந்த பழனியப்பன், 65, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஐந்து பேர் படுகாயமடைந்தனர். தோகைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us