/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குற்றச் சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா தேவை
/
குற்றச் சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா தேவை
ADDED : டிச 21, 2025 07:00 AM
குளித்தலை: குளித்தலை பகுதியில், குற்றச்சம்பவங்களை தடுக்க அனைத்து இடங்களிலும், சிசிடிவி எனப்-படும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.
குளித்தலை அடுத்த நங்கவரம் போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் உள்ள சூரியனுார், நெய்தலுார், முதலைப்பட்டி, செப்ளாப்பட்டி பஞ்-சாயத்துகளில் உள்ள முக்கிய கிராமங்களில் உள்ள நெடுஞ்சாலை மற்றும் முக்கிய இடங்-களில் அடிக்கடி குற்றச்சம்பவங்கள் நடந்து வரு-கின்றன. பலர் புகார் கொடுக்க முன்வருவ-தில்லை.எனவே, பொதுமக்கள் நலன் கருதி குற்றச் சம்ப-வங்களை தடுக்கவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், முக்கியமான இடங்களில் 'சிசிடிவி' கேமராக்களை போலீசார் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்-கின்றனர்.

