/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் காவிரி படுகையில் மரக்கன்று பராமரிப்பு பணி
/
மாயனுார் காவிரி படுகையில் மரக்கன்று பராமரிப்பு பணி
மாயனுார் காவிரி படுகையில் மரக்கன்று பராமரிப்பு பணி
மாயனுார் காவிரி படுகையில் மரக்கன்று பராமரிப்பு பணி
ADDED : செப் 19, 2024 07:28 AM
கிருஷ்ணராயபுரம்: மாயனுார், காவிரி படுகை பகுதியில் நடப்பட்ட மரக்கன்றுகள் பராமரிப்பு பணிகளில், 100 நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்-டனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி படுகை இடங்களில், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் பல்வேறு வகையான
மரக்கன்-றுகள் நடப்பட்டுள்ளது. தற்போது கடுமையான வெயில் மற்றும் வறட்சி காரணமாக மரக்கன்றுகளுக்கு பாதிப்பு ஏற்படும்
நிலை இருந்தது. இந்நிலையில் பஞ்சாயத்து சார்பில், நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள் கொண்டு மரக்கன்றுகளை சுற்றி தடுப்புகள்
அமைக்கப்பட்டது. மேலும் தண்ணீர் கிடைக்காத மரக்கன்றுக-ளுக்கு, காவிரி ஆற்றில் இருந்து பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீர் எடுத்து
வந்து தண்ணீர் ஊற்றப்பட்டது.

