sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டம்

/

வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டம்

வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டம்

வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டம்


ADDED : நவ 29, 2024 01:16 AM

Google News

ADDED : நவ 29, 2024 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற





கரூர், நவ. 29-

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

மாநில செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள, தேக்க நிலையை களைந்து ஒருங்கிணைந்த பணி முதுநிலை தொடர்பாக, தெளிவுரைகளை வருவாய் நிர்வாக ஆணையர் வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல், கரூர் கலெக்டர் அலுவலகம் உள்பட அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

* குளித்தலை தாலுகா அலுவலக வளாகத்தில், நேற்று தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், மாவட்ட செயலாளரும், குளித்தலை தலைமையிடத்து துணை தாசில்தாருமான ஜெயவேல் காந்தன் தலைமையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் மகாமுனி, தலைமையிடத்து தாசில்தார் வைரபெருமாள், தனி தாசில்தார் மதியழகன், டி.எஸ்.ஓ., நீதிராஜன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.

* கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், பணி புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. தாலுகா வருவாய்த்துறை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் வித்தியாவதி தலைமையில் துணை தாசில்தார் மல்லீஸ்வரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us