/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேலம்-கரூர் பயணிகள் ரயிலை திருச்சி வரை இயக்க கோரிக்கை
/
சேலம்-கரூர் பயணிகள் ரயிலை திருச்சி வரை இயக்க கோரிக்கை
சேலம்-கரூர் பயணிகள் ரயிலை திருச்சி வரை இயக்க கோரிக்கை
சேலம்-கரூர் பயணிகள் ரயிலை திருச்சி வரை இயக்க கோரிக்கை
ADDED : பிப் 20, 2024 10:48 AM
கரூர்: கோடைக்காலத்தையொட்டி, சேலத்தில் இருந்து, கரூர் வரை இயக்கப்படும் பயணிகள் ரயிலை, திருச்சி வரை இயக்க தென்னக ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலத்தில் இருந்து கரூருக்கு ராசிபுரம், நாமக்கல் மோகனூர் வழியாக பயணிகள் ரயில், கடந்த, 2013 ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் காலை, 5:30 மணிக்கு சேலம் ஜங்சனில் இருந்து புறப்படும் பயணிகள் ரயில், 7:15 மணிக்கு கரூரை அடைகிறது. பிறகு, 7:30 மணிக்கு கரூரில் இருந்து புறப்பட்டு, 9:15 மணிக்கு சேலம் செல்கிறது.
இரவு, 7:30 மணிக்கு சேலம் ஜங்ஷனில் புறப்பட்டு, இரவு, 9:15 மணிக்கு கரூர் செல்கிறது. பிறகு கரூரில் இருந்து, 9:30 மணிக்கு புறப்பட்டு இரவு, 11:15 மணிக்கு சேலம் செல்கிறது. இந்த பயணிகள் ரயிலை திருச்சி வரை நீட்டிக்க வேண்டும் என, பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, ரயில் பயணிகள் கூறியதாவது:
விரைவில் பொதுத்தேர்வு முடிந்து, பள்ளிகளுக்கு ஆண்டு விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது. இதனால், கோடைக்காலத்தை யொட்டி, கரூர் வரை செல்லும் பயணிகள் ரயிலை திருச்சி வரை நீட்டிக்க வேண்டும்.
சேலம், நாமக்கல், ராசிபுரம், மோகனூர் பகுதியை சேர்ந்த, பெரும் பாலான பொதுமக்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில் களுக்கு பஸ்சில் சுற்றுலா சென்று வருகின்றனர். திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் இருந்து, ஸ்ரீரங்கம் மற்றும் சமயபுரம் கோவில்களுக்கு செல்ல டவுன் பஸ்சில் நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், சேலத்தில் இருந்து இயக்கப்படும் பயணிகள் ரயிலை திருச்சி வரை இயக்கினால், திருச்சி கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் பொதுமக்கள் இறங்கி, அங்கிருந்து டவுன் பஸ்கள் மூலம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் மற்றும் சமயபுரம் கோவில்களுக்கு செல்ல வசதியாக இருக்கும்.
சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு அலைச்சலும், நேரமும் பெருமளவில் குறையும். கட்டணமும் குறைவாகவே இருக்கும். இதை தவிர திருச்சி பகுதிகளில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கும் வசதியாக இருக்கும். எனவே, கோடைக்கால விடுமுறை நெருங்குவதால், சேலத்தில் இருந்து நாள் தோறும் இயக்கப்படும் பயணிகள் ரயிலை, திருச்சி வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர்.

