/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உயர் மின் விளக்குகளை சரி செய்ய வேண்டுகோள்
/
உயர் மின் விளக்குகளை சரி செய்ய வேண்டுகோள்
ADDED : டிச 19, 2025 05:50 AM
குளித்தலை: குளித்தலை தேசிய நெடுஞ்சாலையில், எரியாத விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குளித்தலை, பள்ளிவாசல் தெருபாதை பிரிவில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, உயர் கோபுர மின்விளக்கு கடந்த ஒரு மாதமாக பழுது எற்பட்
டுள்ளது. இதனால், உயர் மின் விளக்கு எரியா-ததால், வாகன ஓட்டிகள் அச்சதுடன் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அந்த இடத்தில் அடிக்கடி சாலை விபத்துகளும் ஏற்பட்டு வருகி-றது.
தேசிய நெடுஞ்சாலை இருவழிச் சாலையாக இருப்பதாலும், நேருக்கு நேர் வாகனங்கள் மோதிக் கொண்டு விபத்துகள் ஏற்பட்டு வருவ-தாலும், உடனே எரியாத மின் விளக்குகளை சரி செய்ய, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகா-ரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது-மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

