/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ராமானுார் வளைவு சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
/
ராமானுார் வளைவு சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
ADDED : அக் 04, 2024 03:10 AM
கரூர்: விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில், கரூர் ராமானுார் வளைவு சாலை பகுதியில், வேகத்தடை அமைக்க வேண்டும்.
கரூர்-, திருச்சி சாலை தெரசா கார்னர் பகுதியில் இருந்து ராமானுார், பசுபதிபாளையம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் ராமானுார், கொளந்தானுார் சாலையில் சென்று வருகிறது. கரூர் பகுதியில் இருந்து, அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனைக்கு செல்பவர்களும் இந்த சாலையில் செல்கின்றனர்.கொளந்தானுார் ராமானுார் இடையே வளைவு பாதை உள்ளது. மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில், அடிக்கடி வாகன விபத்து நடக்கிறது. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில், வளைவு பாதையோரம் பேரிகார்டு அல்லது வேகத்தடை அமைக்க வேண்டும்.

