sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

காலிக்குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

/

காலிக்குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

காலிக்குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

காலிக்குடங்களுடன் மக்கள் சாலை மறியல்


ADDED : மார் 09, 2024 12:44 AM

Google News

ADDED : மார் 09, 2024 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, மார்ச் 9-

குளித்தலை அடுத்த, போத்தராவுத்தன்பட்டி பஞ்., வடுகபட்டியில், மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான மந்தக்குளம் இடத்தில், பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக பஞ்., பொது நிதியில் இருந்து நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று காலை, 10:00 மணியளவில் அதே ஊரை சேர்ந்த ஒருவர் தனக்கு சொந்தமான இந்த இடத்தில், நீர்த்தேக்க தொட்டி கட்டக் கூடாது என கூறி கட்டுமான பணியை தடுத்து நிறுத்தினார். அருகில் இருந்தவர்கள் தட்டி கேட்டபோது, அவர்களையும் தகாத வார்த்தையில் திட்டியள்ளார்.

ஆவேசம் அடைந்த பொதுமக்கள், 50க்கும் மேற்பட்டோர் குளித்தலை பஞ்சப்பட்டி நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.

இதனால், 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us