sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மோகனுார் மாரியம்மன் கோவில் சித்திரை விழா:ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்

/

மோகனுார் மாரியம்மன் கோவில் சித்திரை விழா:ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்

மோகனுார் மாரியம்மன் கோவில் சித்திரை விழா:ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்

மோகனுார் மாரியம்மன் கோவில் சித்திரை விழா:ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்


ADDED : ஏப் 16, 2024 06:57 AM

Google News

ADDED : ஏப் 16, 2024 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார் : மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மோகனுாரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை திருவிழா, வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.இந்தாண்டு விழா, கடந்த, 1ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள் புனித நீராடி, தீர்த்தக்குடம் எடுத்து வந்து, கோவில் முன் நடப்பட்டுள்ள கம்பத்திற்கு ஊற்றி வழிபாடு செய்தனர். தினமும், மாலை, 5:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை செய்து, வெள்ளி கவசத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, வடிசோறு வைத்து சுவாமிக்கு படையல் பூஜை செய்யப்பட்டது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, பூக்குழி பூஜை நடந்தது.தொடர்ந்து, மாலை, 3:00 மணிக்கு, காவிரி ஆற்றுக்கு சென்ற ஆண், பெண் பக்தர்கள் புனித நீராடி, ஊர்வலமாக வந்து, கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இன்று காலை, 6:00 மணிக்கு கிடா வெட்டும், 9:00 மணிக்கு அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும், சுவாமிக்கு, பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். இரவு, 7:00 மணிக்கு, மாவிளக்கு பூஜையும், 10:00 மணிக்கு கம்பம் பிடுங்கி ஆற்றில் விடும் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை மாலை, 3:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us