sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

 ஓடும் ரயிலில் இறங்கியவர் சக்கரத்தில் சிக்கி பலி

/

 ஓடும் ரயிலில் இறங்கியவர் சக்கரத்தில் சிக்கி பலி

 ஓடும் ரயிலில் இறங்கியவர் சக்கரத்தில் சிக்கி பலி

 ஓடும் ரயிலில் இறங்கியவர் சக்கரத்தில் சிக்கி பலி


ADDED : டிச 30, 2025 06:26 AM

Google News

ADDED : டிச 30, 2025 06:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் ரயில்வே ஸ்டேஷனில், ரயிலில் இருந்து இறங்கும் போது, தவறி விழுந்து நிதி நிறுவன உரிமையாளர் உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் துவரப்பாளையத்தை சேர்ந்த முருகேசன், 46. கர்நாடகா மாநிலம், மங்களூரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர், நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, மங்களூரு - புதுச்சேரி விரைவு ரயிலில், கரூர் ரயில்வே ஸ்டேஷன் வந்தார்.

நல்ல துாக்கத்தில் இருந்தவருக்கு, ரயில் கரூர் வந்தது தெரியவில்லை. திடீரென கண் விழித்த முருகேசன், நான்காவது பிளாட்பாரத்தில் இருந்து ரயில் புறப்படும் போது, கீழே இறங்கினார்.

அப்போது, எதிர்பாராத விதமாக ரயில் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ரயில்வே போலீசார், முருகேசன் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us