/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோழித்தீவனம் ஏற்றி செல்லும் லாரிகளால் சுகாதார சீர்கேடு
/
கோழித்தீவனம் ஏற்றி செல்லும் லாரிகளால் சுகாதார சீர்கேடு
கோழித்தீவனம் ஏற்றி செல்லும் லாரிகளால் சுகாதார சீர்கேடு
கோழித்தீவனம் ஏற்றி செல்லும் லாரிகளால் சுகாதார சீர்கேடு
ADDED : நவ 08, 2024 01:22 AM
கோழித்தீவனம் ஏற்றி செல்லும்
லாரிகளால் சுகாதார சீர்கேடு
கரூர், நவ. 8-
கோழித்தீவனம் ஏற்றிச் செல்லும் லாரிகளால், சுகாதாரகேடு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில், ஏராளமான கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும் கோழிகளுக்கு தேவையான தீவனம், கேரளாவில் இருந்து கொண்டு வரப்படுகிறது. பாலக்காடு, கொச்சி, எர்ணாகுளம் பகுதிகளில் இருந்து மாடு, ஆடு. மீன், இறைச்சி கழிவுகளை கொண்ட கோழித் தீவனத்தை வேன் மற்றும் லாரிகளில் ஏற்றி வந்து விற்பனை செய்கின்றனர். இந்த லாரிகள் அனைத்தும் க.பரமத்தி கடந்து நொய்யல், வேலாயுதம்பாளையம் வழியாக நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது. பெரிய பேரல்களில் தீவனங்கள் மூடப்படாமல் கொண்டு செல்லப்படுகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:
மினி வேன்கள் மற்றும் லாரிகள் மூலம் கோழி தீவனங்களை ஏற்றி இந்த வழியாக சென்று வருகின்றன. கோழித் தீவனத்தை மூடாமல் கொண்டு செல்கின்றனர். இதனால் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் கொண்டு செல்லும் போது, துர்நாற்றம் வீசுகிறது. சாலையில் திரவக் கழிவுகள் கொட்டுகின்றன. இவற்றில் ஈ, கொசுக்கள் மொய்த்து சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. நாய்கள் இதனை இழுத்து சென்று சண்டை போடுகின்றன. துர்நாற்றம் காரணமாக சுவாசக்கோளாறு ஏற்படுகிறது. சுகாதாரகேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

