/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போர்வெல்லை சீரமைத்து 'டேங்க்' வைக்க எதிர்பார்ப்பு
/
போர்வெல்லை சீரமைத்து 'டேங்க்' வைக்க எதிர்பார்ப்பு
ADDED : பிப் 05, 2024 12:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: தான்தோன்றிமலை பஞ்., யூனியன் அலுவலகம் அருகே, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக போர்வெல் அமைக்கப்பட்டு சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, சின்டெக்ஸ்
தொட்டியில் உள்ள குழாய்கள் உடைந்துள்ளன. இதனால், பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், போர்வெல் குழாயில் தண்ணீர் வர நீண்ட நேரமாகிறது.
தற்போது, மழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், போர்வெல் குழாயை சீரமைத்து, புதிதாக சின்டெக்ஸ் தொட்டி வைக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

