/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சமையலர் பணியில் இருந்து நீக்கிய 2 பேர் மீது வழக்கு
/
சமையலர் பணியில் இருந்து நீக்கிய 2 பேர் மீது வழக்கு
சமையலர் பணியில் இருந்து நீக்கிய 2 பேர் மீது வழக்கு
சமையலர் பணியில் இருந்து நீக்கிய 2 பேர் மீது வழக்கு
ADDED : டிச 22, 2025 08:54 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த பொருந்தலுார் பஞ்., பொன்-னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரங்க ராஜ் மனைவி நிரோஷா, 35; இவர், சின்ன ரெட்டிய-பட்டி அரசு நடுநிலை பள்ளியில், முதல்வரின் காலை உணவு திட்ட சமையலராக பணியில் இருந்து வந்தார்.
இந்நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர் பானு-மதி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக மகளிர் திட்ட வட்டார மேலாளர் சத்யா ஆகிய இருவரும் சேர்ந்து, எந்த அறிவிப்பு தராமல் தன்னை பணியி-லிருந்து நீக்கிவிட்டு, வேறு ஒரு நபரை அப்ப-ணிக்கு நியமனம் செய்துள்ளதாக, தோகைமலை போலீசார் புகாரளித்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் திட்ட மேலாளர் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

