sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நெருங்கும் தீபாவளி, கார்த்திகை; சுண்ணாம்பு கல் உற்பத்தி தீவிரம்

/

நெருங்கும் தீபாவளி, கார்த்திகை; சுண்ணாம்பு கல் உற்பத்தி தீவிரம்

நெருங்கும் தீபாவளி, கார்த்திகை; சுண்ணாம்பு கல் உற்பத்தி தீவிரம்

நெருங்கும் தீபாவளி, கார்த்திகை; சுண்ணாம்பு கல் உற்பத்தி தீவிரம்


ADDED : அக் 25, 2024 01:05 AM

Google News

ADDED : அக் 25, 2024 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெருங்கும் தீபாவளி, கார்த்திகை; சுண்ணாம்பு கல் உற்பத்தி தீவிரம்

கரூர், அக். 25-

நெருங்கி வரும் தீபாவளி, கார்த்திகை தீப விழாவையொட்டி, சுண்ணாம்பு கல் தயாரிப்பு பணியில், நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன், பண்டிகை என்றாலே மஞ்சள், கரும்பு வரிசையில், வீடுகளுக்கு வெள்ளையடிக்க சுண்ணாம்பு கல் நினைவுக்கு வரும். சுண்ணாம்பு கல் உற்பத்தி செய்ய, ஒவ்வொரு ஊரிலும், அதிகளவில் சூளைகள் அமைக்கப்பட்டிருக்கும். தமிழகத்தில் சுண்ணாம்புக்கல் எனப்படும் வெள்ளை கற்கள் சேலம், பெரம்பலுார், திருநெல்வேலி, கரூர், நாமக்கல், கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் அதிகளவில் கிடைக்கிறது.

சூளையில் ஒரு நாள் வேக வைத்த பிறகுதான், வெள்ளை அடிக்க பயன்படுத்தப்படும் சுண்ணாம்பு கல் கிடைக்கும். நாளடைவில் ரெடிமேடான வெள்ளை பவுடர்கள் விற்பனைக்கு வந்து விட்டதால், சுண்ணாம்பு கல்லுக்கு மவுசு குறைந்து விட்டது. இதனால், சூளைகளும் குறைந்து விட்டது. இருப்பினும், கரூர் மாவட்டத்தில் மண் மங்கலம், வேலாயுதம்பாளையம், மாயனுார், வெள்ளியணை, தென்னிலை, புலியூர், பண்டுதகாரன்புதுார், அரவக்குறிச்சி, லாலாபேட்டை பகுதிகளில் சுண்ணாம்பு சூளைகள் செயல்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, சுண்ணாம்பு சூளை தொழிலாளர்கள் கூறியதாவது:

கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன், கரூர் மாவட்டத்தில், 50க்கும் மேற்பட்ட இடங்களில் சுண்ணாம்பு சூளைகள் செயல்பட்டு வந்தன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், செயற்கையான வெள்ளை பவுடர் விற்பனைக்கு வந்தது. இதனால், சுண்ணாம்பு கல்லுக்கு மவுசு குறைய துவங்கியது. காரணம், சூளையில் தயாரிக்கப்படும் சுண்ணாம்பு கல்லை, முதல் நாள் இரவில், பானையில் ஊற வைக்க வேண்டும். பிறகு, மறுநாள் காலை அதை கரைத்து, வடிகட்டி வீடுகளுக்கு அடிக்க வேண்டும்.

இதனால், கைகளில் எரிச்சலும், அரிப்பும், வலியும் ஏற்படும். இதனால், பொதுமக்கள் எளிமையாக கிடைக்கும், சுண்ணாம்பு பவுடரை விலைக்கு வாங்கி பயன்படுத்த துவங்கி

விட்டனர்.

தற்போது குறைந்தளவில் இரண்டு அல்லது மூன்று பேருடன் சுண்ணாம்பு சூளைகள் செயல்பட்டு வருகிறது. தற்போது சுண்ணாம்பு கல், கட்டுமான தொழில், பட்டுப்புழு பண்ணை, கோழிப் பண்ணைகளில் கிருமி நாசினியாக பயன்படுத்த வாங்கி செல்கின்றனர். ஆயுத பூஜை முடிந்த நிலையில், தீபாவளி பண்டிகை மற்றும் கார்த்திகை தீப திருவிழாவுக்காக உற்பத்தியை துவங்கியுள்ளோம். ஒரு சிறிய மூட்டை, 250 முதல், 350 ரூபாய் வரை விற்பனை செய்கிறோம்.

இவ்வாறு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us