sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் அருகே கிணற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

/

கரூர் அருகே கிணற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

கரூர் அருகே கிணற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

கரூர் அருகே கிணற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி


ADDED : மே 15, 2024 02:27 AM

Google News

ADDED : மே 15, 2024 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர் அருகே, கிணற்றில் குளிக்க சென்ற, 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் புதுார் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் அஷ்வின், 11; தனியார் பள்ளியில், 7 ம் வகுப்பு படித்து வந்தான். அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் மகன் ஸ்ரீ விஷ்ணு, 14; அரசு பள்ளியில், 9 ம் வகுப்பு படித்து வந்தான். ஆண்டாங்கோவில் கிழக்கு செல்வ நகர் பகுதியை சேர்ந்த இளங்கோவன் மகன் மாரிமுத்து, 11; அரசு பள்ளியில், 6 ம் வகுப்பு படித்து வந்தான்.

இவர்கள் மூவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் மாலை, ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியில் உள்ள, ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான, விவசாய கிணற்றில் குளிக்க சென்றுள்ளனர். ஆனால், நீச்சல் தெரியாததால் மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஆனால், இந்த விபரம் தெரியாமல், சிறுவர்களின் குடும்பத்தினர், மூவரையும் காணவில்லை என விடிய, விடிய பல இடங்களில் தேடியுள்ளனர்.

நேற்று அதிகாலை கிணற்றில் மேல் பகுதியில், சிறுவர்களின் உடை, செருப்புகள் இருந்ததை பார்த்த, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கரூர் தீயணைப்பு துறை வீரர்கள், நீரில் மூழ்கி இறந்த மூன்று சிறுவர்களின் உடல்களை மீட்டனர்.

சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us