/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே கிணற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
/
கரூர் அருகே கிணற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
ADDED : மே 15, 2024 02:27 AM
கரூர்:கரூர் அருகே, கிணற்றில் குளிக்க சென்ற, 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கரூர்
மாவட்டம், ஆண்டாங்கோவில் புதுார் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன்
அஷ்வின், 11; தனியார் பள்ளியில், 7 ம் வகுப்பு படித்து வந்தான். அதே
பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் மகன் ஸ்ரீ விஷ்ணு, 14; அரசு பள்ளியில், 9 ம்
வகுப்பு படித்து வந்தான். ஆண்டாங்கோவில் கிழக்கு செல்வ நகர் பகுதியை
சேர்ந்த இளங்கோவன் மகன் மாரிமுத்து, 11; அரசு பள்ளியில், 6 ம் வகுப்பு
படித்து வந்தான்.
இவர்கள் மூவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் மாலை,
ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியில் உள்ள, ரவிச்சந்திரன் என்பவருக்கு
சொந்தமான, விவசாய கிணற்றில் குளிக்க சென்றுள்ளனர். ஆனால், நீச்சல்
தெரியாததால் மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஆனால், இந்த
விபரம் தெரியாமல், சிறுவர்களின் குடும்பத்தினர், மூவரையும்
காணவில்லை என விடிய, விடிய பல இடங்களில் தேடியுள்ளனர்.
நேற்று
அதிகாலை கிணற்றில் மேல் பகுதியில், சிறுவர்களின் உடை, செருப்புகள்
இருந்ததை பார்த்த, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், போலீசாருக்கு
தகவல் கொடுத்தனர். கரூர் தீயணைப்பு துறை வீரர்கள், நீரில் மூழ்கி இறந்த
மூன்று சிறுவர்களின் உடல்களை மீட்டனர்.
சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

